Posts

காலை உணவுக்கு ஏற்றது கம்பங்கூழ்

Beetroot water( ஹீமோகுளோபின் அதிகரிக்க)

Image
 ஒரு பீட்ரூட்டை பாதியாக நறுக்கி அதை பொடியாக நறுக்கி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை அந்த பீட்ரூட் ஊறிய தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர கீமோகுளோபின் அதிகரிக்கும்.

Make your bones stronger!Here is how...எலும்பு வலுபெற...

Image
 பால்,தயிர்,மோர் போன்ற பால் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள கால்சியம் உங்கள் எலும்பை வலுவாக்கும். சமையலில் பூண்டு,  வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள சல்ஃபர் உங்கள் எலும்பு, மூட்டுகளை பலமாக்கும்.

Benefits of eating papaya(பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்)

Image
  1. பார்வை கோளாரு சரியாகும். 2.  குழந்தைகள் பற்கள் உறுதியாகும், எழும்புகள் வழுப்படும். 3. தோல் பிரச்சனைகள் தீரும். 4. நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். 5. குழந்தைகள் மூளை வளர்ச்சி சிறப்பாகும். 6. பெண்களுக்கு மாதவிலக்கு சீராகும். 7. நெஞ்செரிச்சல் குணமாகும். 8. உடல் எடை குறையும்.

Benefits of fenugreek(வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள்)

Image
  கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து இருந்தால் அவர்கள் முதல் நாள் இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெந்தயத்தை நீீருடன் பருகி வந்தால் கல்லீரல் கொழுப்பு கரைவதுடன் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுக்கு வரும்.

Benefits of eating olives

Image
  1.Weight loss 2.Aids digestive tract 3.Improves skin and hair health 4.Reduce pain 5.Good  source of iron 6.Improves eye health 7.Cancer prevention 8.Reduce allergies 9.Cardiovascular benefits 10.Increases GLUTATHIONE levels

Best time to drink green tea

Image
Best time to drink green tea: 1. After breakfast. ( to prevent dehydration) 2. 1/2 hour before exercise ( to burn fat) 3. Before and after breakfast (to burn fat) 4. 1/2 before bedtime ( for weight loss) 5.  2-3 cups daily (detoxify body)

Daily requirement of protein in our body(தினமும் நாம் எவ்வளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்)

Image
 நாம் அன்றாடம்் சாப்பிடும் பால், பால் சார்ந்த பொருள்கள்,  பருப்பு வகைகள்,  பயறு வகைகள், முட்டை வெள்ளைகரு, சோயா சங்ஸ், மீன், இறைச்சி வகைகள்,  பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் இவற்றில் நிறைய புரத சத்து உள்ளது. ஒருவர் தன் உயரத்தில் 100 சென்டிமீட்டர் அளவை குறைத்தால் எவ்வளவு வருமோ அந்த அளவை கிராமாக மாற்றி அதே அளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவர் உயரம் 150 சென்டிமீட்டர் என்று வைத்துக் கொண்டால் அதில் 100யை கழித்து மீதமுள்ள 50யை கிராமாக மாற்ற வேண்டும். ஆக 150 சென்டி மீட்டர் உயரம் கொண்ட ஒருவர் தினமும் 50 கிராம் அளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Benefits of cashew(முந்திரியினால் கிடைக்கும் நன்மைகள்)

Image
முந்திரியால் கிடைக்கும் நன்மைகள் : முந்திரியில் மோனோசாச்சுரேட்டர் என்னும் கொழுப்பு உள்ளது. இது இதயநோய்க்கான ஆபாயத்தை குறைக்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது. முந்திரியின் பாலை சருமத்தில் பூசி வந்தால் சருமம் மென்மையாகவும், அழகாகவும் ஆகும். முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளவர்கள் முந்திரியை தொடர்ந்து சாப்பிடுவதால் அப்பிரச்சனை சரியாகும். 

Benefits of ginger ( இஞ்சியின் நன்மைகள்)

Image
இஞ்சியின் நன்மைகள் : இஞ்சியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக இஞ்சியை உணவில் எடுத்துக் கொள்வதால் உடலில் சுவாசப் பாதையில் உள்ள கோளாறுகள் குணமாகும். இஞ்சியில் 'ஜிஞ்சரால்' எனும் பொருள் தான் அதனின் இந்த வித்தியாசமான சுவைக்கு காரணம். ஜிஞ்சரால் உடலில் சளி, இருமலை கட்டுப்படுத்தும். நுரையீரலை சுத்தப்படுத்தி சுவாசப் பாதையை தூய்மையாக்குகிறது. ஒரு அங்குள அளவு இஞ்சியை நசிக்கி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி  அது ஒரு டம்ளர் ஆகும் வரை நன்கு வற்ற வைத்து அந்த கசாயத்தை பருகி வந்தால் காய்ச்சல் மட்டும் அல்ல இன்று உலகயே அச்சுறுத்தும் கொரானா வைரசும் கட்டுப்படும்.

Get rid of dark circles( கண்ணின் கருவளையத்தை போக்க)

Image
கண்ணில் கருவளையம் மறைய: ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து இந்த கலவையை கண் கருவளையத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.

Do's and Dont's_செய்யக் கூடாத தவறுகள்

செய்யக் கூடாத தவறுகள்: 1. ஒரு மகன் தன் தந்தையின் கண்ணீரைப் பார்க்கக் கூடாது. 2. தன் பிள்ளைகள் பற்றிய அவப்பெயர் பெற்றோர் காதில் விழக் கூடாது. 3. உடன் பிறந்தோரிடம் அந்தஸ்து, பகட்டு காட்டக்கூடாது. 4. தன் வாழ்கை துணையை சந்தேகப் படக் கூடாது. 5. கொடும் பசியானாலும் மதியாதார் வீட்டில் உண்ணக் கூடாது. 6. தலைமை பதவியில் இருப்போருக்கு சபலம் கூடாது. 7. வாழ்ந்து கெட்டோரின் வறுமையை தூற்றக் கூடாது. 8. பகைவரே ஆனாலும் ஒருவர் இறப்பில் மகிழ்ச்சி கூடாது. 9. வெற்றியாளருக்கு இருமாப்பு கூடாது.  10. தர்மம் செய்வோரை தடுக்கக் கூடாது. 

Benefits of papaya (பப்பாளியின் நன்மைகள்)

Image
  பப்பாளி பழத்தில் பல நன்மைகள் உள்ளன அவற்றில் சிலவற்றை பார்ப்போம்: 1.பப்பாளி சாப்பிடுவதால் இதயம் பலப்படும். 2. புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம். 3. இரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. 4. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 5. தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது. 6.  எளிதில் ஜீரணமாகும். 7. ஊட்டச் சத்து மிகுந்தது. 8. கால்சியம், மெக்னீசீயம் நிறைந்து.  9. அஜீரணக் கோளாறு வராது. பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருப்பதால் அதை அன்றாடம் எடுத்துக் கொண்டு வாழ்வில் நலம் பெறுவோம்.

குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள்

குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள்: உணவு கட்டுப் பாட்டில் உள்ளவர்கள் எந்த எந்த உணவில் குறைவான கார்போஹைட்ரேட் உள்ளது என தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. அவைகளாவன: 1. சூரியகாந்தி விதைகள். 2. வேகவைத்த முட்டை. 3. பிரக்கோலி. 4. பீன்ஸ். 5. வால்நட்ஸ் 6. கீரைகள். 7. காலிபிளவர்.

How to prevent beetles in rice and food grains?_அரிசி, பருப்பில் வண்டு வராமல் இருக்க...

Image
  அரிசி பருப்பில் வண்டு வராமல் இருக்க. நாம் மொத்தமாக வாங்கி வைக்கும் அரிசி மற்றும் பருப்பில் வண்டுகள் வைத்துவிடும். என்னதான் நாம் அவைகளை வெயிலில் காயவைத்து வைத்தாலும் நாளடைவில் வண்டுகள் வைத்துவிடும். வண்டுகள் வராமல் இருக்க எளிய வழியும் உள்ளது. நாம் மொத்தமாக வாங்கி வைக்கும் அரிசி மற்றும் பருப்பில் மிளகாய் வத்தல், வசம்பு, வேப்பம் குச்சி அல்லது பிரியாணி இலை இவைகளை ஏதாவது ஒன்றை போட்டு வைத்தாலும் வண்டுகள் வராது.

Hibiscus tea_செம்பருத்தி பூ டீ

Image
  செம்பருத்தி பூ டீ செம்பருத்தி பூவில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இதயத்தை பலப்படுத்தவும், குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்கவும் செம்பருத்தி பூ டீ மிகவும் நன்மை பயக்கும்.  ஒரு பாத்திரத்தில் 200Ml தண்ணீர் கொதிக்க விட்டு அதில் 2 செம்பருத்தி பூக்களை  போட்டு கொதிவந்ததும் அடுப்பை அணைத்து 1/2 எலுமிச்சம் பழம் பிழிந்து, நாட்டுச் சக்கரை சேர்த்து பருகிவந்தால் இதயம் நன்கு பலப்படும். குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் அவர்கள் நன்கு சுறுசுறுப்பாக வளர்வார்கள்.

Types of Rice and their benefits_எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்?

Image
  *உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்* *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?* *இதோ*👇 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி* :  மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  6. *காலாநமக் அரிசி* : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  7. *மூங்கில் அரிசி*: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  8. *அறுபதாம் குறுவை அரிசி* : எலும்பு சரியாகும்.  9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  10. *தங்கச்சம்பா அரிசி* :  பல், இதயம் வலுவாகும்.  11. *கருங்குறுவை அரிசி* :  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொட...

Wonders of Nature__இயற்கையின் சில அதிசயங்கள்

  இயற்கையின் சில அதிசயங்கள் இறைவனின் படைப்பில் சில அதிசய மனிதர்களை சந்தித்து இருப்போம். சிலர் நம் மனதை மகிழ்ச்சி அடைய வைத்திருப்பார்கள், சிலர் வியக்கடைய வைத்திருப்பார்கள். அது போல் நான் வியப்படைந்த இயற்கையின் விளைவிப்பை இங்கே பதிவிட்டுள்ளேன். நீங்களும் கண்டு மகிழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...... 

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி

Image
முள்ளு முருங்கை ரொட்டி நாள்பட்ட சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்து முள்ளு முருங்கை. இதை ரொட்டியாக செய்து சாப்பிட்டால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவர். செய்முறை: தேவையான பொருள்கள்: இட்லி அரிசி      -1/2 கிலோ பூண்டு                 - 6 ல் தேங்காய் துருவல்- சிறிது மிளகாய் வத்தல் - 2 மிளகு                   - 1/2 ஸ்பூன் முள்ளு முருங்கயிலை- சிறிது உப்பு                      - தேவைகேட்ப முதலில் முள்ளு முருங்க இலைகளை காம்பு நீக்கி நன்கு ஆய்ந்து கொள்ள வேண்டும்.  இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைக்க வேண்டும். அரைக்கும் போதே முள்ளு முருங்க இலை உட்பட மேலே கூறிய அனைத்து பொருள்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். இதற்கு தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அரைத்த மாவை வாழையிலையில் ரொட்டியாக தட்...

Shri Bogar Siddha__ஸ்ரீ போகர் சித்தர்

Image
போகர் சித்தரின் மூலமந்திரம்: ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா சித்தர் போகர் சுவாமிகள் போற்றி! போற்றி!! போகர் பற்றிய சில தகவல்கள்: போகர் ஆகாயப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இளம் வயதில் இறந்த இளைஞனின் மனைவி அழுது கொண்டிருந்தாள். அவளது விதவைக் கோலம் போகரை மிகவும் பாதித்தது. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகில் இருக்கும் நவநாத சித்தரின் சமாதியை அடைந்தார். நவநாத சித்தர் அவருக்கு காட்சி அளித்தார். போகரும் சஞ்சீவினி மந்திர வித்தையை கற்றுத் தருமாறு அவர்களிடம் கேட்டார். போகா! இந்த மக்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்ன தான் துன்பம் வந்தாலும் திருந்தி வாழார். அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மீண்டும் பிறப்பார்கள். நீ போய் உன் தவத்தை மேற்க்கொள் போ! என்றார். ஆனால், போகர் திரும்பவும் மந்திரத்தை கற்றுத் தருமாறு வற்புறுத்தினார். நவநாத சித்தர்கள் பொறுமையிழந்து கோபமாக போகா! தெய்வ நியதிக்கு எதிராக நீ செயல் படுகிறாய். நீ கற்றுக் கொண்ட வித்தைகளால் தெய்வ நிந்தனைகள் தான் அதிகமாகும் எனவே நீ கற்றுக் கொண்டது எல்லாமே உனக்கு மறந்து போய்விடும்...... முத்தீயும் ...

Can eggs be eaten by people who have cholesterol?__முட்டை சாப்பிடலாமா கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்?

Image
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?: அசைவப் பிரியர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பண்டம் முட்டை. இதில் கொலஸ்ட்ரால் உள்ளதா? இல்லையா? என பலருக்கு சந்தேகம் உண்டு. பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவில் கொலஸ்ட்ரால் இல்லை. மாறாக மஞ்சள் கருவில் 213 மில்லிகிராம் அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

How to remove pesticides from vegetables?__ரசாயன மருந்துகளை எளிய முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து நீக்கும் வழி

Image
ரசாயன மருந்தை காய்கறி மற்றும் பழங்களில் இருந்து எவ்வாறு நீக்குவது என்று பார்ப்போம்: நாம் அன்றாடம் உண்ணும் காய் மற்றும் கனிகளில் ஏராளமான பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கின்றனர். இதனால் நம் உடலில் சாதாரண தொற்று முதல் புற்றுநோய் வரை அனைத்து வகையான நோய்களும் வர வழிவகை செய்கின்றன. இந்த பூச்சி கொல்லி மருந்தை நீக்க மிக எளிய வழி ஒன்று உள்ளது. அதற்கு தேவை கல்உப்பு மற்றும் மஞ்சள்தூள்.  காய்கறி மற்றும் பழங்களை கழுவும் முறை: நாம் என்ன என்ன காய்கறிகளை சமைக்கப் போகிறோமோ அந்த காய்கள் அனைத்தையும் ஒரு சட்டியில் போட்டு அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சிறிது கல்உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். பதினைந்து நிமிடம் கழித்து அவைகளை நன்கு தேய்த்து கழுவி சமைக்கவும். இதே முறையில் பழங்களையும் கழுவலாம். இவ்வாறு கழுவி சாப்பிடும் பொருள்களே ஆரோக்கியமானது.

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் கூடாது(அறிவியல் விளக்கம்):

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் கூடாது : புரட்டாசி மாதம் நம்மில் பெருவாரியான மக்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது இல்லை. இதற்கு ஆன்மீகக் காரணங்கள் இருந்தாலும், சில அறிவியல் காரணங்களும் உள்ளன. இதை நாம் உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் இதற்கு ஆன்மீக காரணத்தை பிரதானமாகக் கூறியுள்ளனர். அறிவியல் காரணம்: பொதுவாக தமிழ் மாதங்களான ஆடி மற்றும் ஆவணியை காற்றடி காலம் என்பர். அதே போல் பங்குனி மற்றும் சித்திரை மாதத்தை வெயில் காலம் என்பர். ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதத்தை மழைக் காலம் என்பர். இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சீதோஷண நிலையை நமக்கு உணர்த்தும்.  ஆனால் இந்த புரட்டாசி மாதம் மட்டும் சீதோஷண நிலை சீராக இருக்காது. இம்மாதம் விழும் மழைத் தூரலினால் உண்டாகும் உஷ்ணம் வெயில் காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை விட மிகக் கடுமையானது. இப்படி உஷ்ணமாக இருக்கும் நம் உடல் அசைவ உணவை ஜுரணித்துக் கொள்ளுமா? ஜுரணிக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவம் தவிர்க்க வழியுறுத்தி உள்ளனர்.

Want black hair?Read this!_முடி கருமையாக வளர கருவேப்பிலையின் பங்கு

Image
முடி கருமையாக வளர கருவேப்பிலையின் பங்கு நம் அனைவருக்குமே முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு கருவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது. எனக்குத் தெரிந்த சில முறைகளில் கருவேப்பிலையை பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும். 1. கருவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 100 கிராம் அளவு தேங்காய் எண்ணையோடு லேசாக சூடு படுத்தவும், எண்ணை கொதித்து விடக் கூடாது. இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி நன்றாகவும், கருமையாகவும் வளரும். 2. கருவேப்பிலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். 3. வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதை கருவேப்பிலையுடன் அரைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளைஞர்களுக்கு இளநரை பிரச்சனை அண்டாது.

Village style fish fry!!கிராமத்து மீன் வறுவல்

Image
கிராமத்து மீன் வறுவல்: தேவையான பொருள்கள்: நெய் மீன்(அல்லது)  ஏதாவது மீன்வகை- 1கிலோ  எண்ணை        - தேவைகேற்ப சோம்பு                -1ஸ்பூன் மிளகு                  -1ஸ்பூன் பூண்டு                 -10 பல் மிளகாய்வத்தல்- 12 உப்பு                      -தேவைகேற்ப செய் முறை: சோம்பு, மிளகு, வத்தல்,பூண்டு இவைகளை நன்கு வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும். இவைகளை சுத்தம் செய்த மீன் துண்டுகளுடன் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். அந்த மீன் துண்டங்களை தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணை ஊற்றி நன்கு பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது மிதமான தீயில் பொரிக்க வேண்டும். மிகச் சுவையான கிராமத்து மீன் வறுவல் தயார்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு சாற்றுவதன் காரணம்

Image
ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு சாற்றுவதன் காரணம்: ராமாயணப் போரில் பல அம்புகள் ஆஞ்சநேயரைத் தாக்கியது. ஏனெனில் ராம, லெட்சுமணனை அனுமன் தன் இரு தோளிலும் தாங்கி இருந்தார். அதனால் ராவணன் எய்த பல அம்புகள் அனுமனைத் தாக்கியது.  அனுமனின் வலியை போக்கி ரணத்தை ஆற்ற ஸ்ரீராமர் முதன்முதலில் அனுமனுக்கு வெண்ணை காப்பு சாற்றினார். அதன் காரணமாகவே அனுமனுக்கு வெண்ணை சாற்றும் வழக்கம் வந்தது.

Madurai Mutton Chukka!__மதுரை மட்டன் சுக்கா!

Image
மதுரை மட்டன் சுக்கா: செய்வதற்கு மிகவும் எளிமையாகவும், மிகவும் சுவையானதாகவும் இருக்கும் இந்த மதுரை மட்டன் சுக்கா. தேவையான பொருள்கள்: மட்டன்              - 1/2 கிலோ பூண்டு             - 8 பல் இஞ்சி               - சிறிது மிளகாய் தூள்-1 ஸ்பூன் சீரகத் தூள்      - 1/2 ஸ்பூன் உப்பு                   - தேவைகேற்ப எண்ணை         - தேவைகேற்ப தாளிக்க: சோம்பு சிறிது மிளகாய் வத்தல் 2 செய்முறை: பூண்டு,  இஞ்சி, மிளகாய் தூள், சீரகத்தூள் அனைத்தையும் வழுவழுப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் ஒரு குழிக் கரண்டி எண்ணை ஊற்றி சோம்பு, பட்ட மிளகாய் தாளித்து அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரை கிலோ மட்டனையும் சேர்த்து வதக்க வேண்டும் . தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மட்டன் வேக 5 விசில் குக்கரில் வைக்கவும். மட்டன...

How to reduce water wastage?_ தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சில வழிகள்......

Image
தண்ணீரை சிக்கனமாக்க பயன்படுத்த சில வழிகள்: *  பல் தேய்க்கும் போதும், சேவ் செய்யும் போதும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையான போது மட்டும் குழாயை திறக்க வேண்டும். * வாஷிங் மிஷினில் துவைப்பதை விட கையில் துவைப்பது உடலுக்கு மட்டும் அல்ல துணிகளுக்கும் ஆரோக்கியம். இதனால் தண்ணீரும் நிறைய சேமிக்கலாம். * காய்கறிகள் கழுவும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம். * தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் போது நேரத்தை குறித்துக் கொள்ளலாம். தொட்டியில் நீர் நிறைந்து கீழே விழும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. * பாத்திரம் கழுவும் போது தண்ணீரை பிடித்து வைத்து பயன்படுத்தினால் நல்லது. * இன்று பல வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளது. அதில் கழிவு நீர் செல்ல ஒரு குழாய் இருக்கும், இந்த நீரை வீணாக்காமல் பாத்திரம் கழுவ, காய்கறி கழுவ என்று பயன்படுத்தலாம். * மழைநீரை சேகரித்து அந்த நீரை சமையலுக்கு கூட பயன்படுத்தலாம். * இன்றைய சூழலில் நாம் நம் வாரிசுகளுக்கு சொத்து, பணம் இவைகளை சேமிப்பதை விட தண்ணீரை சேமிப்பதே இன்றைய அவசிய தேவை என்பதே நிதர்சனமான உண்மை.

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Image
குதிரை சிலை சொல்லும் வரலாறு நாம் நிறைய போர்வீரர்களின் சிலைகளைப் பார்த்திருப்போம். அவற்றில் நிறைய சிலைகள் வீரர்கள் குதிரையின் மேல் அமர்ந்திருப்பது போல் இருக்கும். அச்சிலைகளில் சில சூட்சமங்கள் உள்ளன.  அதாவது குதிரை சிலையில் குதிரை இரண்டு கால்களையும் தரையில் ஊன்றியிருந்தால் அந்த வீரர் இயற்கையாக மரணம் அடைந்தார் என பொருள். குதிரை ஒரு காலை ஊன்றி மறு காலை தூக்கியிருந்தால் அந்த வீரர் போரில் காயம் அடைந்து பிறகு இறந்தார் என பொருள். குதிரை இரண்டு கால்களையும் தூக்கி இருந்தால் அந்த வீரர் போரில் வீர மரணம் அடைந்தார் என பொருள். எனவே இனி நாம் இச்சிலைகளை காணும் போது அவ்வீரர்களின் வீரமரணம் பற்றியும் அறிவோம்.

7 lines Vishnu Sakasranamam_ஏழு வரியில் விஷ்ணு சகஸ்ரநாமம்

Image
ஒரு முறை பார்வதி தேவி ஈசனிடம், எல்லோரும் பயன்பெரும் விதமாக 1000 திருநாமங்கள் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமத்தை எளிய முறையில் பாராயணம் செய்ய வழி என்ன? என்று ஈசனிடம் கேட்டதற்கு பலனாக நமக்கு கிடைத்தது தான் இந்த ராம மந்திரம். இதை தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் பாராயணம் செய்தால் விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்னதற்கு சமமாகும். இதனால் நம் பாவங்கள் தொலைந்து மனம் தூய்மை அடைகிறது. ராம மந்திரம்: ஸ்ரீராம ராம ராமேதி ரமே  ராமே மனோரமே ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே  ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ஸ்ரீராம நாம வரானந ஓம் நம இதி இதை வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாராயணம் செய்து பயனடைய வேண்டுகிறேன்.

Saasthira Bandham_சாஸ்திர பந்தம்

கடன் பிரச்சனை தீர்ந்து செல்வவளம் பெற வேண்டுமா? இன்றைய  சூழ்நிலையில் நாம் கடன் வாங்குவது நம்மில் பலருக்கு அவசியமானதாக உள்ளது. நம் தொழிலை விரிவு படுத்த, விவசாயத்திற்கு, திருமணத்திற்கு என்று நாம் கடன் வாங்குவதை தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் வட்டி கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வட்டி கட்ட மேலும் கடன் வாங்கி அல்லல் படுபவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்களுக்கான பதிவுதான் இது. சாஸ்திர பந்தம் கடன்களை அடைத்து செல்வவளம் பெற பாம்பன் சுவாமிகள் இயற்றியது இந்த சாஸ்திர பந்தம். இதை தினமும் விளக்கேற்றி முருகப்பெருமான் முன் இம்மந்திரத்தை படித்து வந்தால் கடன்கள் அடைந்து வாழ்வில் செல்வவளம்பெறுவோம். " வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா மாலைபூ நேமதிற மால் வலர்தே - சாலவ மாபாசம் போக மதிதேசார் மாபூதம் வா பாதந் தாவேல வா" 

Ice biryani benefits_ காலை உணவுக்கு ஏற்றது பழையசாதம்

Image
காலை உணவுக்கு ஏற்றது பழைய சாதம் பழைய சாதத்தில் உள்ள சிறப்பு: நம் முன்னோர்களும், விவசாயிகளும் விரும்பி சாப்பிட்ட பழைய சாதத்தில்பல நன்மைகள் உள்ளன. பழைய சாதத்தை தொடர்ந்து உண்பதால் நம் உடலில் மெட்டபாலிச இயக்கம் சரியாக உள்ளது என்று அர்த்தம். அதாவது நம் உடலில் இறந்த செல்கள் அதிகம் உள்ளன அதை வெளியேற்றி புதிய செல்களை உருவாக்குவது தான் மெட்டபாலிச இயக்கம். பழைய செல்கள் பலவழிகளில் வெளியேறுகின்றன. புதிய செல்கள் நம் உடல் வலிமையை கூட்டுகின்றன .பழைய சாதத்தை நாம் சாப்பிடும் போது நம் உடலில் புதிய செல்கள் உருவாகுகின்றன. வெளிநாட்டினர் விரும்பி உண்ணும் உணவு: வெளிநாட்டினர் பழைய சாதத்தை விரும்பி உண்ண ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு நம் உணவின் அருமை தெரிந்து நம் பாரம்பரிய உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். நாம் அவர்களின் உணவான பயனற்ற கெல்லாக்ஸ், ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலை வளர்கிறோம். மேலை நாட்டில் இருந்து அறிமுகமான இந்த வகையான உணவுகளை உண்பதை பெருமையாகவும், நம் ஊரு உணவுகள் உண்பதை கௌரவ குறைவாகவும் நினைக்கிறோம். காலை உணவாக பழைய சாதத்தை எடுத்துக்கொள்வது மிக, மிக நல்லது. இதை நம் குழந்தைக...

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Image
வலம்புரிச் சங்கை வழிபடும் முறை வலம்புரி சங்கு உருவாகும் விதம்: கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல்கள் வகை புழுக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம் தான் சங்கு. இதில் சிறிதாகவும், நீளவாக்கிலும் உள்ளது பெண் சங்கு, பெரிதாகவும், தடிமனாகவும் உள்ளது ஆண் சங்கு. சங்குகளின் மேல் உள்ள கோடுகளை வைத்து அது வலம்புரி சங்கா அல்லது இடம்புரி சங்கா என வகைப் படுத்துவர். ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு. ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடது புறம் வந்தால் அது இடம்புறிச் சங்கு. இடம்புறிச் சங்கை காட்டிலும் வலம்புரி சங்குதான் அபூர்வமானது.  இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப் படுகிறது அதனால் இதற்கு தெய்வீக சக்தி மிக அதிகம். வலம்புரி சங்கின் சிறப்பு: மகா விஷ்ணுவின் இடது கையில் இருப்பது வலம்புரி சங்கு. சங்கை நம் காதில் வைத்தால் "ஓம்" என்னும்  பிரணவ ஓசை நமக்கு கேட்கும். வலம்புரி சங்கை வீட்டில், வியாபாரம் பார்க்கும் இடத்தில் வைத்து பூஜித்து வந்தால...

How to become a SIDDHA?_சித்தராக மாறுவது எளிதான காரியமா?

Image
சித்தநிலையை எப்படி அடைவது ? நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மிகஅதிகம். இதனால் நம்மில் பலர் சாமியார்ஆகிவிடலாம் என்று கூட நினைப்போம். ஆனால் அது எளிதானகாரியம் அல்ல. ஒரு மனிதன் சித்தநிலையை அடைவது,ஒரே பிறவியில் கிடைக்கும் பாக்கியம் இல்லை. பல பிறவிகளில் அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மங்கள் போன்றவையே அவனை இறைநிலைக்கு அழைத்துச் செல்கிறது. உதாரணமாக புத்தர்ஞானம் பெருவதற்க்கு முன்பாக, அவர் அதற்கு முன்பு எடுத்த முன்னூர் பிறவிகள் அவருக்கு புலப்பட்டதாம். அதே போல் தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம், தவவலிமை ஆகியவை ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடன் சேர்ந்து பிறக்கும். அதனால் அவை அனைத்தும் பல பூட்டுக்களால்,அவனுள்ளே அடைத்து வைக்கப் பட்டிருக்கும். உதரணமாக பண ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை போன்ற எல்லா ஆசைகளும் ஒருவனுக்கு எழும். அவையெல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வரவேண்டும் என்பதற்காக தரப்பட்டவை. அருணகிரிநாதர் முருகப்பெருமானின்அருளை பெறுவதற்கு முன்பாக,பெண் பித்தனாக இருந்தார். அவர் சகோதரிகூறிய ஒரு வார்த்தை அவர் பெண்ஆசையை வெறுக்ககாரணமாக அமைந்தது. பின் மகானாக மாறி முருகப்பெருமானிட...

Colocasia/Seppankizhangu Fry_சேப்பங்கிழங்கு வறுவல்

Image
சேப்பங்கிழங்கு வறுவல்   என் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் இந்த சேப்பங்கிழங்கு வறுவல் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் செய்முறை மிகவும் எளிது, ஆனால் சுவையோ மிகவும் அபாரமாக இருக்கும். சாதாரணமாக நாம் வீட்டில் வைக்கும் குழம்புக்கும், அல்லது கலந்த சாதங்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையானபொருள்கள்:  சேப்பங்கிழங்கு                  : 1/2 கிலோ தேங்காய் துருவல்            : சிறிது சோம்பு                                    : 1 ஸ்பூன் மிளகாய்வத்தல்                 : 7 வெள்ளைபூண்டு      ...

Thiruvathirai Kali_திருவாதிரை களி

Image
திருவாதிரை களி மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் சேர்ந்தநாள் ஆருத்ரா திருநாள். இந்த திருநாளில் நாம் நடராஜபெருமாளுக்கு திருவாதிரை களி நைவேத்தியம் படைத்தால் நம் குடும்பத்துக்கு சகல நன்மைகளும் உண்டாகும்.

Healthy life....Here are some tips!_ஆரோக்கியமாக வாழ சில வழிகள்

Image
எந்த விஷயத்தையும் நேர்மறையாக சிந்தியுங்கள். அன்றாட வேலைகளை பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள். அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு எழுந்துவிடுங்கள். தினமும் குறைத்து  3 லிட்டர் தண்ணீராவது குடிக்கவேண்டும். கண்டிப்பாக காலை உணவை தவிர்க்ககூடாது. சரியான நேரத்தில் சாப்பிடவேண்டும்.  காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்து கொள்ளவேண்டும். ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை சாப்பிடவேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும், யோகா செய்வது உடல்நலத்துக்கும் நல்லது, மனதுக்கும் நல்லது.  படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். புத்தகம் வாசிக்க தினமும் அரைமணிநேரம் ஒதுக்கவேண்டும். உங்களை மகிழ்ச்சியாகும் விஷயங்களை செய்ய தயங்காதீர்கள். குடும்பத்தோடு விடுமுறையின் போது வெளிஊருக்கோ அல்லது வெளிஇடங்களுக்கோ செல்லும்  பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.  உங்களை சுற்றி மகிழ்ச்சியான விஷயங்கள் மற்றும் சூழ்நிலைகளோடு எப்போதும் இருங்கள். எதிர்மறை எண்ணத்தோடு இருப்பவர்களோடு கொஞ்சம் எப்போதும் தள்ளி இருங்கள். தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள். தேவைப்படும்போது முடியாது, வேண்டாம் என...

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Image
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டி என்னும் அர்த்தத்தில் சொல்லுவர். ஆனால் உண்மையான விளக்கம் என்னவென்றால்.  ஆடம்பரமாக வாழும் தாய்.   பொறுப்பில்லாமல் வாழும் தந்தை.  ஒழுக்கமற்ற மனைவி.  ஏமாற்றும், மற்றும் துரோகம் செய்யும் உடன் பிறந்தோர். சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள். இந்த ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் அவன் ஆண்டி ஆவான் என்பது தான் பொருள்.