Unknown facts about Raavanan!_இராவணனின் மறுமுகங்கள்

இராவணன் பற்றி நமக்கு தெரிந்த விஷயம்,  அவன் பெரும் வீரம் படைத்த தமிழ் மாமன்னன் என்று. ஆனால் நமக்கு தெரியாதது அவன் ஒரு சிறந்த சிவ பக்தன்.
இராவணன் மருத்துவ துறையில் கை தேர்ந்தவன். மருத்துவம் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளான்.
அவன் ஒரு சிறந்த வீணை வித்துவான்.
இராவணன் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவன். தன் மகன் இந்திரஜித் பிறக்கும் தருவாயில் ஒன்பது கிரகங்களும் இந்த இந்த இடத்தில் தான் நிற்க வேண்டும் என்று நவகிரங்களுக்கு ஆணையிட்டுள்ளான். இதில் அனைத்து கிரங்களும் கட்டுப்பட சனி மட்டும் சம்மதிக்கவில்லை. இந்த ஒரு கிரகத்தின் மாற்றமே இராவண காவியம் முடிவுர காரணமானதாக கூறப்படுகிறது.
மற்றும் இராவண ஆட்சி காலமே இலங்கையின் பொற்காலம் என்று கூறப்படுகிறது.
இராவணனுக்கு இயற்கையாகவே பத்து தலைகள் கிடையாது. அவன் பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் தலை சிறந்து விளங்கியதால் பத்து தலை இராவணன் என்று பெயர் மறுவப்பட்டதாக கூறப்படுகிறது.
இவை இராவணன்  வாழ்ந்த கோட்டை இன்றும் இலங்கையில் கம்பீரமாக நிற்கிறது.
இராவணன் இறக்கும் தருவாயில் இருந்த போது இராமன், லட்சுமணனிடம் நீ போய் இராவணனிடம் உனக்கு வாழ்கைக்கு தேவைப்படும் சில அறிவுரைகளை கேட்டு வா என்றான். அவனும் அவ்வாரே செய்ய, இராவணன் கொடுத்த அறிவுரைகளாவது.
1. உன்னுடைய மெய்காப்பாலன், சமையல்காரன், உன்னுடன் பிறந்த சகோதரன் இவர்களில் யாரையும் பகைக்காதே.
2. யாரையும் அவர்கள் உருவத்தை கொண்டு எடை போடாதே. நான் அனுமனை குறைத்து மதிப்பிட்டது போல்.
3. வெற்றி பெரும் போது கர்வம் கொள்ளாதே. வெற்றியும், தோல்வியும் நிரந்தரம் அல்ல என அவசியமான அறிவுரைகளை வழங்கினான்.
இராவணனை கொன்றதால் இராமனுக்கு 3 வித மான தோஷங்கள் பிடித்தன. அவை,
1. பிரம்மஹத்தி தோஷம், இராவணன் ஒரு பிராமணன் அவனை கொன்றதால் இராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. இதை போக்கவே இராமன் பிரதிஷ்டை செய்தது ராமேஸ்வரத்தில் உள்ள சிவலிங்கம்.
2. வீரஹத்தி தோஷம்,  சிறந்த வீரனைக் கொன்றதால் இத்தோஷம் உண்டானது.
3. சாயாஹத்தி தோஷம், இராவணன் வீணை வாசிப்பதில் வல்லவன். இதில் இவனுக்கு இணை இவனே. ஒரு தலை சிறந்த வீணை வித்துவானை கொன்றதால் இத்தோஷம் வந்தது.

Comments

Popular Posts

What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

தங்க ஆபரணங்கள் சேர

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி