What is kannika dhaanam?_கன்னிகா தானம் என்றால் என்ன?

ஒருவரின் பசியை போக்கும் அன்னதானமே சிறந்தது என்பர் சிலர். ஆனால் தானத்தில் சிறந்தது கன்னிகா தானம்தான்.சாஸ்திரங்களும் இதை மஹா தானம் என்கின்றன.

திருமணத்தின் போது ஒரு தந்தை தன் மகளை, வேறு குடும்பத்தில் பிறந்த ஒரு ஆண் மகனுக்கு தானமாக கொடுப்பதே கன்னிகா தானம் என்பர்.

எல்லா தானத்திலும் இது சிறந்தது என்று சொல்ல இந்த நிகழ்வின் போது சொல்ல படுகிற மந்திரங்களும், சங்கல்ப்பங்களுமே சாட்சி.

"தசானாம்பூர்வேஷம்,தசானாம்பரேஷாம்,
மமஆத்மனஸ்ஸ ஏகவிம்சதிகுல உத்தாரண....."
என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்னிகாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்துமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்னிகாதானம் செய்பவனும் ஆஹ, இருபத்தோரு தலைமுறையும் கரைசேர இந்த தானத்தை செய்கிறேன், என்று பொருள் வரும்.

உன் வம்சவிருத்திக்காக, என் குலவிளக்கை உனக்கு தானமாகத் தருகிறேன் என்று பொருள் படும் கன்னிகாதானமே உலகில் மிகச்சிறந்த தானமாகும்.

ஒரு பெண் பிள்ளையைப் பெற்று அவளை கண்ணனுக்கு கண்ணாக வளர்த்து, மற்றொருவனிடம் வம்சவிருதிக்காக அவளை தானம் செய்து  கொடுப்பதால், அவனது வம்சத்தில் இருபத்தோரு தலைமுறையும் கரையேறும் என்றால் பெண்பிள்ளையை பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சாஸ்திரம் சொல்கிறது.

பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு சமர்ப்பணம்.

Comments

Popular Posts

How to worship Valampuri Sangu?வலம்புரிச் சங்கை வழிபடும் முறை

Rain water harvesting _மழைநீர் சேகரிப்பு

Avoid plastics!Here is why....நெகிழியை ஒழிப்போம்

தங்க ஆபரணங்கள் சேர

Nalladhangal Story_நல்லதங்காள் கதை (கிராம தேவதை)

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி (உண்மை விளக்கம்)

Wonders of nature!🌅🌌🏞மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் .....

What does "horse"__ statue mean?குதிரை சிலையில் உள்ளது போர்வீரர்களின் வரலாறு

Healthy Recipe:Mullu Murungai Roti__முள்ளு முருங்கை ரொட்டி